ஈரோடு: நூல் விலை ஏற்றம் இறக்கமாக இருப்பதால், கடந்த சில மாதங்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நூல் விலை ஏற்ற இறக்கத்தை சரி செய்து நிலையான விலையில் நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு அருகே சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 2.40 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.