சென்னை: மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாணவர்களுடன் கமல்ஹாசன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இதையடுத்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் நீர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஓட்டு போடும் இடத்தில் ஆள்மாறாட்டம் செய்யும் தைரியம் எல்லா இடத்திலும் வந்துவிடும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.