2 நக்சல்கள் சுட்டுக்கொலை

நாக்பூர்: மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய தாக்குதலில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்க்கு உட்பட்ட நர்காசா காட்டுப் பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, நக்சல்கள் தடுப்பு சிறப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்தனர். நக்சல்களை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த நக்சல்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் 2 நக்சல்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுட்டுக் கொல்லப்பட்டர்வர்கள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

Related Stories: