புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி.யாக இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 14ம் தேதி முடிந்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்த மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பாஜ வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், மன்மோகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.