வேப்பூர்: வேப்பூர் அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 22 ேலப்டாப்களை, காவலாளியை தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவிகளுக்கு வழங்குவதற்காக 179 லேப்டாப்களை அரசு அனுப்பியிருந்தது. இதில் கடந்த 2ம் தேதி முதல் சுமார் 140 லேப்டாப்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 39 லேப்டாப்களை பள்ளியின் ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டியிருந்தனர். இப்பள்ளிக்கு நிரந்தர காவலாளி இல்லாததால் தற்காலிகமாக சேப்பாக்கத்தை சேர்ந்த கலியன் (55) என்பவரை காவலாளியாக பள்ளி நிர்வாகம் நியமனம் செய்தது.