ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்ஸிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்குள் மறைந்து இருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் தீவிரவாதிகளும் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏகே - 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்து வருகிறது.

Related Stories: