சென்னை: தமிழ்கம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை, வீடுகளில் இனிப்பு பரிமாறி ரம்ஜான் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மும்பை,டெல்லியில் உள்ள மசூதிகளில் நடக்கும் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். இதை தொடர்ந்து நோன்பு நிறைவடைந்த பிறகு பிறை தெரிந்த மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயுப், பிறை தெரிந்ததாகவும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையும் அறிவிப்பாக வெளியிட்டார்.