சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில வருடங்களாக தனது பாடல்களுக்கான காப்புரிமை பிரச்னையில் இசையமைப்பாளர் இளையராஜா தீவிரமாக இயங்கி வருகிறார். காப்புரிமை விவகாரத்தில் மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதையே நான் செய்கிறேன்; இது காலம் தாழ்ந்த செயல் என்றும் அவர் விளக்கம் கூறியிருந்தார். இதற்கிடையே, இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒருசிலர் வருவாய் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டிய இளையராஜா, தனது பாடலை அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.