மதுரை: நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் துவங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசார், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், விசாரணையை மதுரை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) மாற்றி கடந்த மே 8ல் உத்தரவிட்டது.