பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து

*அதிர்ஷ்டவசமாக 2 பெண்கள் உயிர்தப்பினர்

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் முந்தி செல்ல முயன்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று மதியம் வேலூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அதேநேரத்தில் விசாகப்பட்டிணத்தில் இருந்து கேரளாவிற்கு கார் ஒன்று பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக கார் மீது லாரி மோதியது. தொடர்ந்து, பல அடி தூரத்திற்கு கார் இழுத்து செல்லப்பட்டது. பின்னர், கார் மற்றும் லாரி தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் ஏறி நின்றது. லாரி டிரைவர் சாதுர்யமாக நிறுத்தியதால் எதிர்திசையில் சென்று விபத்து ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 2 பெண்கள் எந்தவித காயங்களின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிகொண்டா போலீசார் சுங்கச்சாவடி கிரேன் மூலம் கார் மற்றும் லாரியை மீட்டனர். மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: