சென்னை: தலைமைச் செயலக ஊழியர்களுக்கு என தனியாக தமிழக அரசு சில ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் நேர்த்தியான, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் ஆடைகள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசாணையின்படி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், சேலை, துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகிய ஆடைகளை அணிந்து வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கூடுமான வகையில், அடர்வண்ணங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.