ராஞ்சி: பீகார் மற்றும் ஜார்கண்டில் மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததால் அதனை ஏற்றுக்கொள்ள இயலாமல் லாலு பிரசாத் யாதவ் சாப்பிட மறுத்து சோகத்தில் மூழ்கியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ். மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக ராஞ்சியில் இருக்கும் ரிம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டது. இதில் பீகாரில் 19 இடங்களில் லாலுவின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஒரு இடத்தை மட்டுமே காங்கிரஸ் பிடித்தது. 39 இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் கூட ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெறவில்லை.