தீ விபத்தில் உயிரிழந்த 3 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில், காம்ப்ளக்ஸ் ஒன்றின் 4வது மாடியில் செயல்பட்டு வந்த கோச்சிங் சென்டரில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 மாணவ, மாணவிகள் தீயில் கருகி பலியாயினர். தீ விபத்தின்போது  கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த கோச்சிங் சென்டரில் பயின்று வந்த மாணவ, மாணவிகளில், 3 பேர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். குஜராத் உயர்நிலை  பள்ளித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தீ விபத்தில் உயிரிழந்த யாஷ்வி கேவாடியா, மான்சி வர்ஷினி மற்றும் ஹஸ்தி சுரானி ஆகிய 3 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்  எண்ணிக்கை நேற்று 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: