தேர்தலை குறைந்த நாட்களில் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு கடித்த எழுதுவேன் : நிதீஷ் குமார்

பீகார் : பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னா, ராஜ் பவனில் உள்ள அரசு பள்ளியில் 326 வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் பீகார் துணை முதல்வர் சுசில் மோடி பாட்டனாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர், முதல்வர் நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களுக்கு நடத்தக்கூடாது. மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கும் கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கும் அதிக நாட்கள் உள்ளது என்று கூறினார். மேலும் மக்களவைத் தேர்தலை குறைந்த நாட்களில் நடத்துவது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு கடித்த எழுதுவேன் என்று தெரிவித்தார்.

Related Stories: