சென்னை: தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக ஏற்கனவே 13 பேரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான கும்பலிடம் இருந்து 100 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலி பாஸ்போர்ட் மோசடியில் திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கிருபராசா, விமலன், உதயா உட்பட 13 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இலங்கையை சேர்ந்தவர்கள் வெளிநாடு தப்பிச் செல்ல போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட இடைத்தரகர் கும்பல் ரூ.5000க்கு போலி பாஸ்போர்ட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.