சென்னை: சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள டுமின் குப்பத்தில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. சென்னை பட்டினபாக்கத்தில் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ளது டுமின் குப்பம். இங்கு பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளும், குடிசை பகுதிகளும் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலையில் குடிசை வீடுகள் இருக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.