சென்னை: இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 2 சர்வதேச கடத்தல்காரர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினர்.கொழும்பில் இருந்து தனியார் விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தது. அதில் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் ஒன்று தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர். அதில் சென்னையை சேர்ந்த சுமார் 30 மற்றும் 40 வயதுடைய இரண்டு பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது, அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை.