திருவனந்தபுரம்: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கேரளாவில் பாலக்காடு, காசர்கோடு உள்பட பகுதிகளில் ஐஎஸ் இயக்கத்தினருடன் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதுதொடர்பாக பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் கைது செய்யப்பட்டார். இவருக்கு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் கொச்சி, கொடுங்கல்லூர் ஆகிய இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இவரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், நேற்று என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.