ஒடிசாவில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்களவை, சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு பதிவான வாக்குகளும் இம்மாதம் 23ம் தேதிதான் எண்ணப்பட உள்ளன. இதனால், இம்மாநிலத்தில் இப்போதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இது ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள சதாபாடா கடற்பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 185 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.