சென்னை: தண்டவாள பணி காரணமாக குண்டூர் - தெனாலி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: குண்டூர் - தெனாலி இடையே நடைபெறும் தண்டவாள பணி காரணமாக ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படும். அதன்படி ஐதராபாத் - சென்னை சென்ட்ரல் ரயில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும். ஐதராபாத் - திருவனந்தபுரம் சபரி விரைவு ரயில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை குண்டூர், கிருஷ்ணா கல்வாய் வழியாக இயக்கப்படும். செங்கல்பட்டு - காக்கிநாடா விரைவு ரயில் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை கிருஷ்ணா கல்வாய், தெனாலி வழியாக இயக்கப்படும்.