காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மக்களவைத் தொகுதி எம்.பியுமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மனைவி பிரியதர்சினி ராஜே சிந்தியாவை குவாலியர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக்க வேண்டும் என அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.குவாலியர் தொகுதி, சிந்தியா மன்னர் குடும்பத்தினரின் கைவசமே அதிகம் இருந்துள்ளது. ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தையும் மறைந்த காங்கிரஸ் தலைவருமான மாதவராவ் சிந்தியா 6 முறை இந்த தொகுதியில் எம்.பியாக இருந்துள்ளார். அதேபோல் ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே சிந்தியாவும், அத்தை யசோதா ராஜே சிந்தியாவும் பாஜ சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.