சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டி : சரத்குமார் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். ‘எதிர்காலத்தில் அரசியலின் தரத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டுள்ளேன். அதன் அடிப்படையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எனது கட்சியினரை தனித்து போட்டியிட பணித்திருக்கிறேன். மேலும் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும், எதிர்காலத்தில் சட்டமன்ற தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும். தூய்மையான மக்கள் பணியில் ஈடுபட விரும்பும் ஒத்த கருத்துடைய அரசியல் மற்றும் பிற அமைப்புகள் அரசியல் களத்தில் மாற்றத்தை விரும்பும் குடிமக்களும் எங்களுக்கு ஆதரவு அளிக்க முன்வரவேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேட்பாளர் பட்டியலும், 21 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்படும்’ என்று சரத்குமார் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: