ஆலந்தூர்: கிண்டியில் சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.கிண்டி பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில், கிண்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் சாதாரண உடையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரகசியமாக கண்காணித்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், உல்லாசத்திற்கு தன்னிடம் இளம்பெண்கள் இருப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 2,500 என்றும் சப்-இன்பெக்டரிடம் கூறியுள்ளார்.