சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர தேசிய சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ எங்கள் சங்கத்தில் 120 உறுப்பினர்கள் உள்ளனர். அப்புறப்படுத்தப்பட்ட எங்களுக்கு மாற்று இடமாக பல்லவன் சாலையில் கடைகளை அமைக்க தடையில்லா சான்று வழங்குமாறு சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனருக்கு (வடக்கு) உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு வாதிட்டார்.