கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில், வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் குவிண்ட்ஸ் லேண்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மவுன்ஸ்வில்லே நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்குள்ள 22 நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க்கப்பட்டது.