வீட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

பூந்தமல்லி: திருவேற்காடு காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (50). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: