ஹரியானா: எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய போது தரம் குறைந்த உணவு பரிமாறப்படுவதாக புகார் தெரிவித்த தேஜ்பகதூரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் தேஜ்பகதூரின் வீடு உள்ளது. இந்நிலையில் தேஜ்பகதூரின் மகன் ரோஹித் உயிரிழந்தது தொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உள்பக்கமாக பூட்டப்பட்ட அறையில் கையில் துப்பாக்கியுடன் படுக்கை மீது ரோஹித் இறந்து கிடந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.