சென்னை: தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும், இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும் என சென்னை கிண்டியில் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்தார்.