புதுடெல்லி: உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படும், ‘புர்ஜ் கலிபா’வில் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம் பெற்றுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படுவது ‘புர்ஜ் கலிபா’. இது, 163 மாடிகளை கொண்டது. 830 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கட்டிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படம் வைக்கப்பட்டு இருப்பது போன்ற வீடியோ ஒன்று பேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், துபாய்க்கு வரும் ராகுலை வரவேற்கும் விதமாக புர்ஜ் கலிபாவில் அவருடைய புகைப்படம் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது ஆனால், இது போலி வீடியோ என விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராகுல் காந்தி நாளை முதல் 2 நாள் பயணமாக துபாய் செல்வது உண்மைதான்.