டெல்லி: வரும் டிசம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை ஒருநாள் தவிர மற்ற நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி அலுவல்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற உள்ள போராட்டம் காரணமாக 24-ம் தேதி தவிர 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகள் அடங்கியுள்ள 4 சங்கங்களின் கோரிக்கைபடி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வருகிற 21-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.