தஞ்சை: கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை என தஞ்சையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் 84,000 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க மத்திய அரசிடம் பரிசீலணை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.