சென்னை : நாகையில் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 10 விழுக்காடு மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். ஊரகப் பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் மின் வினியோகம் வழங்குவதற்கு முயற்சித்து வருகிறோம் என்றும், மின்கம்பங்கள் தேவை இருப்பதால் ஆந்திர அரசிடம் இருந்து 20 ஆயிரம் மின் கம்பங்கள் கேட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.