மும்பை: நடிகர் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அக்ஷரா ஹாசன் கடந்த நவம்பர் 7ம் தேதி டிவிட்டர் பதிவில், “சமீபத்தில் என்னுடைய தனிப்பட்ட படங்கள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. கோணல் புத்தி கொண்ட ஒரு நபர் தனது மகிழ்ச்சிக்காக ஒரு இளம்பெண்ணை இப்படி பாதிப்புக்குள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது.