அந்தரங்க படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட மர்ம நபருக்கு எதிராக அக்‌ஷரா ஹாசன் புகார்: போலீஸ் வழக்குப்பதிவு

மும்பை: நடிகர் கமலஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அக்‌ஷரா ஹாசன் கடந்த நவம்பர் 7ம் தேதி டிவிட்டர் பதிவில், “சமீபத்தில் என்னுடைய தனிப்பட்ட படங்கள் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளன. இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. கோணல் புத்தி கொண்ட ஒரு நபர் தனது மகிழ்ச்சிக்காக ஒரு இளம்பெண்ணை இப்படி பாதிப்புக்குள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது.

அந்த நபரை கண்டுபிடிக்கக் கோரி மும்பை போலீசின் சைபர் குற்றப்பிரிவை கேட்டுக் கொள்வேன்” என்று கூறியிருந்தார். இந்த டிவிட்டர் பதிவை தொடர்ந்து மும்பை போலீசார் இந்த பிரச்னையை கையில் எடுத்து தாங்களாகவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். வர்சோவா காவல் நிலையத்தில் இந்த வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: