ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு உதவி பெரும் பள்ளியில் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. ஆரணியை அடுத்த பத்தியாபுரம் சூசை நகரில் உள்ள புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. மாற்றுச்சான்றிதழ்கள் வாங்கி கொண்டு செல்லும் மாணவர்கள் பெயரில் போலியாக மாற்றுச்சான்றிதழ்களை தயாரித்து அதனை பள்ளி நிர்வாகமே 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் என்பது குற்றச்சாட்டாகும்.