சென்னை: மொரீஷியஸ் நாட்டின் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் குமரகோட்டம் முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஏகாம்பரநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய மொரீஷியஸ் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இந்தியப் பெருங்கடலில் உள்ள ஏராளமான தீவு நாடுகளில் மொரீஷியஸூம் ஒன்று. எங்களின் குடும்பம் தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்து 5 தலைமுறை ஆகிறது. கடந்த 150 ஆண்டுகளில் மொரீஷியஸ் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.