காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், போமாய் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர்  தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை அறிய விசாரணை நடத்தப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: