பாரிக்கர் அரசு இயற்கையாக கவிழ்ந்துவிடும்: காங். நம்பிக்கை

பனாஜி:  கோவாவில் பாரிக்கர் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் பாரிக்கர் நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ஏ.செல்லக்குமார் அளித்த பேட்டி: மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு இயற்கையான முறையில் கவிழ்ந்துவிடும். ஆட்சியை பிடிக்கும் பேராசையாலும் பண ஆசை காரணமாகவும் வாக்காளர்களின் ஓட்டுக்கு மதிப்பளிக்காமல் இந்த அரசு உருவானது. எனவே, கோவா மக்களின் விருப்பம் மற்றும் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் காங்கிரஸ் அரசு விரைவில் கோவாவில் பதவியேற்கும். எவ்வளவு நாளில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்பதை கூறமுடியாது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரசுக்கு 16 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: