சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி அருகே சேதமடைந்த பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குண்டாறு உள்ளது. இந்த ஆற்றை கடந்து செல்ல 55 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலம் உள்ளது. உரிய  பராமரிப்பில்லாததால் தற்போது பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. பாலத்தின் பல பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக  செல்லும் வாகனங்கள் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிைல ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு பாலத்தின் தடுப்பு சுவர் மற்றும் பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: