சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 70 பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிண்டி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று இலவசமாக வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: மண்புழு உரத்தினை நிலத்திற்கு இடுவதினால் மண்ணில் உள்ள ரசாயனத்தின் அளவு குறைக்கப்பட்டு, மண்ணின் உயிர் தன்மை மேம்படுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் அளவு அதிகரிக்கிறது.