சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் நேற்று சுவேதாரண்யேஸ்வர் கோயிலில் வழிபாடு செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை கோயில் அர்ச்சகர் ராஜாப்பா சிவாச்சாரியார் வரவேற்றார். பின்னர் அவர் சுவேதாரண்யேஸ்வரர், பிரம்மவித்யாம்பிகை, அகோரமூர்த்தி, புதன், துர்க்கை மற்றும் சவேதமகாகாளி உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.