காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் மீஞ்சூர் கொண்டக்கரை பகுதியை சேர்ந்த ஆர்.ஜெயப்பிரகாஷ் கட்சி விரோத செயல்களில் ஈடுபடுவதாலும், மாநில, மாவட்ட கமிட்டிகளின் கட்டுபாடுகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, இவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுகிறது. இவருடன் காங்கிரஸ் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கும் இவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய மாவட்ட கமிட்டி பரிந்துரைக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: