சென்னை: தோழியின் மரணத்தால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடனேயே இருப்பேன் என விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார். ஜூலை 25ம் தேதி அதிகாலை 1 மணியளவில் புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் போது மாமல்லபுரம் அருகே யாஷிகா ஆனந்த்தின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அவரது தோழி வல்லிசெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்த், நாளை தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி யாரும் தன்னை வாழ்த்த வேண்டாம் என்று இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போதைய நிலைமையை வெளிப்படுத்த இயலவில்லை என்றும் எப்போதும் குற்ற உணர்வு நீங்காது என்றும் கூறியிருக்கும் யாஷிகா ஆனந்த், கோர விபத்தில் இருந்து தனது உயிரை காத்த கடவுளுக்கு நன்றி செல்வதா? அல்லது என் சிறந்த தோழியை பறித்ததற்காக வாழ்நாள் முழுவதும் பழிப்பதா? என்று கூறியுள்ளார். பவானி என்னை மன்னிக்க மாட்டாள் என்றும் பவானியின் குடும்பத்தை இத்தகைய கடின சூழலுக்கு தள்ளியதற்கு மன்னிப்பு கூறுவதாகவும் யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார். பவானியின் குடும்பம் ஒருநாள் தன்னை மன்னிக்கும் என்றும் எப்பொழுதும் பவானியின் நினைவுடன் வாடுவேன் என்றும் யாஷிகா தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார். …
The post தோழியின் மரணத்தால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன்!: விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கம்..!! appeared first on Dinakaran.