சிக்ஸ் பேக் ஆசையால் வந்த வினை படப்பிடிப்பில் நடிகர் மயங்கி விழுந்தார்

ஐதராபாத்: சிக்ஸ் பேக் ஆசையால் ஏற்பட்ட பாதிப்பால் தெலுங்கு நடிகர் நாக சவுர்யா படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார். தமிழில் திவ்யா படத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடித்தவர் நாக சவுர்யா. தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்போது அருணாசலம் என்பவர் இயக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே நாக சவுர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமணம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் நாக சவுர்யாவுக்கு சிக்ஸ் பேக் வைக்கும் ஆசை வந்தது. இதற்காக கடந்த 6 மாதமாக ஜிம்முக்கு சென்று வருகிறார். நீர்ச்சத்து மிக்க உணவுகளை தவிர்த்து, டயட்டில் இருந்து வருகிறார். இதில் அவரது உடல் எடை குறைந்தது.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது, நாக சவுர்யா திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அவரை படக்குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நீர் இழப்பு காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் குளூகோஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவர் ஒருநாள் முழுவதும் ஆஸ்பத்திரியில் இருந்தார். அதன் பிறகே வீட்டுக்கு சென்றார்.  திருமணம் நடைபெறும் நேரத்தில் அவர் மயங்கி விழுந்ததால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: