சென்னை: வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ‘கடமையை செய்’ என்ற படம் வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நடித்தது குறித்து யாஷிகா ஆனந்த் கூறியதாவது: பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. இக்கதையை நான் கேட்டபோது, என்னால் அந்த நர்ஸ் கேரக்டரில் சிறப் பாக நடிக்க முடியுமா என்று பயந்தேன். ஆனால், ஷூட்டிங்ஸ்பாட்டில் டைரக்டர் ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாகச் சொல்லி என்னை சிறப்பாக நடிக்க வைத்தார்.