இனி அண்ணனுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்: கங்கை அமரன்

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் இளையராஜாவும், தம்பி கங்கை அமரனும் பிரிந்தனர். குடும்ப நிகழ்ச்சியில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்து மனம்விட்டு பேசி உள்ளனர். இதுகுறித்து கங்கை அமரன் கூறியிருப்பதாவது: நீண்ட காலத்துக்குப் பிறகு அண்ணனை சந்தித்தேன். அவரே என்னை அழைத்து பேசினார். என்னுடைய உடல்நிலையைப் பற்றி விசாரித்தார். சிறுவயதில் நான் எப்படி இருந்தேன். என்னவெல்லாம் செய்தேன் என்பதைப் பற்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். என் மனைவி இறந்து போனது பற்றியும் கேட்டார்.

அவருடைய இசை இப்போது எப்படியிருக்கிறது என்று சொன்னேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணனுடன் சேர்ந்திருக்கிறேன். அவர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன்.  இனி என் வாழ்க்கையில் எல்லாமே என் அண்ணன் எடுக்கும் முடிவுதான். அந்த முடிவுகளுக்கு கட்டுப்படுவேன். தெய்வ அருளால் இந்த சந்திப்பு நடந்துள்ளது. என்கிறார் கங்கை அமரன்.

Related Stories: