‘பெத்தி’ டப்பிங் தொடங்கிய ராம் சரண்

தேசிய விருது வென்ற ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், புச்சி பாபு சனா. தற்போது அவர் இயக்கும் ‘பெத்தி’ என்ற படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்து கதையில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, ஷோபனா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

வரும் ஏப்ரல் 30 தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை ெநருங்கியுள்ளது. இதில் ‘சிக்கிரி சிக்கிரி’ என்ற முதல் சிங்கிள் வெளியாகி யூடியூப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தனது சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை ராம் சரண் நேற்று தொடங்கியுள்ளார். இதை ஒரு வீடியோ மூலம் படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: