முதன்முறையாக கால்இறுதியில் மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுன்ட் ஆப் 16 சுற்றில் நேற்றுநடந்த போட்டியில் ஸ்பெயின் (6வது ரேங்க்), மொராக்கோ (22வது ரேங்க் ) அணிகள் மோதின.ஆட்ட நேர முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.இதன்பின் வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு அணியும் கோல் அடிக்காததையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. வெற்றிக்கு மொராக்கோ கோல்கீப்பர் 31 வயதான யாசின் பவுனோ முக்கிய பங்கு வகித்தார். பெனால்டி ஷூட் அவுட்டில் 3 முறை பெனால்டி கோல்களை தடுத்து வெற்றிக்கு உதவியது அவர்தான். அவரை சக வீரர்கள் தூக்கிப்போட்டு கொண்டாடினர். நடப்பு உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற 2வது அணி மொராக்கோ. இந்த வெற்றி மூலம் நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி என்ற சிறப்பை மொராக்கோ பெற்றுள்ளது….

The post முதன்முறையாக கால்இறுதியில் மொராக்கோ appeared first on Dinakaran.

Related Stories: