சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா கூறுகையில், ‘கொரோனா வைரஸ் மனித வாழ்க்கையை மாற்றிவிட்டது. எனக்குள்ளும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இனி மகிழ்ச்சிக்காக மட்டுமே உழைப்பது, கஷ்டப்படுவது என்று முடிவு செய்துள்ளேன். நாளை என்ன நடக்கும் என்று தெரியாத நிலையற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொரோனா உணர்த்தி இருக்கிறது. கொரோனா எல்லா குடும்பங்களையும் ேசர்த்து வைத்துள்ளது. அன்பின் வலிமையை உணர்த்தியுள்ளது. சேமிப்புக்கான
முக்கியத்துவத்தை சொல்லியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.