பொன்னியின் செல்வன் தாய்லாந்தை தொடர்ந்து புனே ஷூட்டிங்கும் ரத்து

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், மோகன்பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தாய்லாந்தில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாய்லாந்தில் நடைபெற இருந்த படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புனேயிலும் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருந்தனர். வெளிமாநிலங்களிலும் கொரோனா அச்சம் நிலவுவதால் புனே ஷெட்யூலையும் ரத்து செய்துள்ளனர். இதையடுத்து சென்னையிலேயே ஸ்டுடியோக்களில் பின்னர் நடத்த இருந்த ஷூட்டிங்கை இப்போதே நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

Related Stories: