இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கியவர் மித்ரன். அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். சுல்தான் படத்தை முடிக்க இருக்கும் கார்த்தி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். ஏப்ரலில் இந்த படத்தை அவர் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முடிந்த கையோடு மித்ரன் படத்தை ஏப்ரலில் தொடங்க அவர் முடிவு செய்திருக்கிறார். இது மித்ரனின் முந்தைய படங்களை போல், ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாக உள்ளது.