மித்ரன் இயக்கத்தில் கார்த்தி

இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கியவர் மித்ரன். அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். சுல்தான் படத்தை முடிக்க இருக்கும் கார்த்தி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். ஏப்ரலில் இந்த படத்தை அவர் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முடிந்த கையோடு மித்ரன் படத்தை ஏப்ரலில் தொடங்க அவர் முடிவு செய்திருக்கிறார். இது மித்ரனின் முந்தைய படங்களை போல், ஆக்‌ஷன் திரில்லர் கதையாக உருவாக உள்ளது.

படத்துக்கு ஹீரோயின், மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே கனா படத்துக்கு பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் இதை கார்த்தி தரப்பு மறுத்துள்ளது. பொன்னியின் செல்வன், சுல்தான் படங்களுக்கு பிறகு மித்ரன் இயக்கும் படத்தில் தான் கார்த்தி நடிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: